Wednesday 23 November 2011

மன்னிப்பாயா???

கடிதம்,நினைவுகளை சுமந்துவருவது,
நிகழ்காலத்தில் ஆனந்தத்தையும்
பின்னாளில் சோகத்தையும் தரவல்லது.


எப்போதும் போல் இப்போதும் கண்ணீர்
இடர்பாடுகளுக்கிடைய படித்து முடித்தாள், 
கவிதை நிரம்பிய கடிதத்தை.
பிருந்தா...

இலக்கை சரியாக அடைந்த அம்பு போல மற்றொன்று எய்ய தெரியா வேடன்
போல்
பிரம்மனை ஆக்கியவள்.
இவள்போல இன்னொருத்தியை படைக்க தெரியவில்லை அவனுக்கு.
"பேரழகி"என்பதற்கு விரிவுரை தரும் அவள் உருவம். இவள் ஆசிரியர்பயிற்சி
முடித்து வீட்டில், தேர்வுமுடிவுக்காக காத்திருக்கிறாள்
முகநூலை திறந்தாள். அவளின் காதலனின் இருப்பை காட்டியது, அவனின் பெயர் அருகே இருந்த பச்சைப்பொட்டு 
பாலு...
காஞ்சிபுரத்தில் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து கொண்டிருக்கிறான். கவிதை எழுதுவது அவனுக்கு மிகபிடித்தமான ஒன்று. நல்லா பேசுவான் செண்டிமெண்டல் இடியட். 
"Hai..."இவள்,
தாமதத்தோடு "Hi..."அவன்
பிஸியா?
"இல்ல இல்ல! கிளம்பலாம்ன்னு நினைச்சேன். சொல்லு!"என்றான். 
"கெளம்ப
வேண்டியது தான,அப்புறம் என்ன சொல்லு? எதோ தியாகம் பண்ற மாதிரி" 
எப்போதும் இவர்களின் உரையாடல் இப்படி தானிருக்கும். 
சிறது நேர பேச்சுக்கு பின்,வழக்கம்போல தூக்கம்வருவதாக
சொல்லி புறப்பட்டான் காதலன். 
அவன் விடைபெற்றதும்,அவனது நினைவுகள் புழங்கதொடங்கிற்று.
நினைவுகளின் கேள்விகளுக்கு நிஜத்திடம் விளக்கமில்லை.
காதலை ஏற்றுக்கொள்ளும் வரை, அவனிடமிருந்து கிடைத்த பாசம்,
எங்கே போனது இப்போது? 
விரட்டியது
விடைதெரியா கேள்விகள்.



ற்றுமோரு  கடிதம் படிக்க தொடங்கினாள்.
மூக்கு புடைக்க புடைக்க
விம்மி விம்மி அழவைத்தது அக்கடிதம்.
இந்த கடிதம் எழுதிய காதலன் இப்போது
எங்கே தொலைந்து போனான்? 
இந்த கடிதம் எழுதிய நாட்களை அவனுக்கு நினைவுபடுத்த விரும்பி முகநூலில்
அந்த கவிதையை பகிர்ந்தாள்.
காலை எழுந்ததும் இந்த பகிர்தலை பார்த்த
பாலு,கடுங்கோபமுற்றான்.
அலைபேசியை எடுத்து அவளை அழைத்தான்.
கிட்டத்தட்ட
2மாதங்களுக்கு பின் அழைக்கிறான்,
அவளின் குரல் கேட்டதும் கோபம் கொஞ்சம்
குறைந்தது உண்மையெனினும் கோபத்தை விட்டுக்கொடுக்காமல் 
"ஏன் அந்த
கவிதையை FBல போட்டே?
"ச்சும்மா..."
"என்ன சும்மா?
அது நா உனக்காக எழுதினது
அத்தோட அந்த போஸ்ட்ல என் பேர கூட போடல நீ.. 
அது என்ன ஒன்னோடதா? 
இடைவிடாது பேசினான்.
எப்படி சொல்வாள், அந்நாட்களாய் நினைபடுத்தவே பகிர்ந்தேன் என. 
மௌனம் மட்டுமே பதிலாய் நின்றது. 
"ஒங்கிட்ட தான் பேசிகிட்டு
இருக்கேன்" 
"ஸ்ஸ்ஸாரி"
"இப்போ ஏன் அழுற?" 
மௌனம்ம்ம்ம்ம்... கோபம் வெகுவாக குறைந்தது.
அழைப்பு துண்டிக்கபட்டது... 
வனுக்கொன்றும் பாசம் இல்லாமல் போய்விடவில்லை. 
முன்பு போல் இப்போது பேசமுடிவதில்லை, இவன் மனதில் 
தனது நடத்தையில் எந்த தவறும் இல்லை என்பதை அழுத்தமாக நம்பினான். 
எல்லா உறவுகளிலும் ஆரம்ப நாட்களில் அதிகம் பேச வேண்டியிருக்கும், 
புரிதலை மேம்படுத்தி கொள்ள.. அதுவும் ஆண் பெண் உறவில் சொல்லவே தேவையில்லை.அவ்வுறவு முதிர்வு பெற்று பக்குவபட்டபின் 
அவ்வளவாக பேச வேண்டி இருப்பதில்லை. இதுவே அவள் கேள்விகளுக்கு 
இவன் எப்போதும் வைத்திருக்கும் விளக்கம்.   
வளுக்கோ,அவளது நாட்களில் நடப்பதை யாரிடம் 
பகிர்ந்துகொள்கிறாளோ அவர்களை நெருக்கமானவர்கள் என்று நினைப்பாள்.
ஆரம்பநாட்களில் பேசியது போலவே அவன் பேசிக்கொண்டிருக்க
வேண்டும் என்று.. 
வளை இவனுக்கு அறிமுகப்படுத்தியது சமூக இணையதளம் தான், 
முகநூல்... இவனது நட்பு அழைப்பை ஏற்றுக்கொண்டது கூட அவளில்லை,
அவளது தோழி ஜெனிதா மேரி, அதுவும் இவனது எழுத்துக்கள் பிடித்துப்போய் ஏற்றுக்கொண்டாள்.
எழுத்துக்களில் பெரிதாக ஈடுபாடில்லை பிருந்தாவிற்கு..
எப்போது ஆன்லைனுக்கு வந்தாலும் இவளுக்கு Message செய்யாமல் இருக்கமாட்டான்.எல்லோருக்கும் பதில் அளிப்பது இவளது தனித்துவம்.
நம்மை மதிப்போரை நாமும் மதிக்க வேண்டும் என்பது இவள் எண்ணம்.
தனித்துவம் தானே? இந்த குணம் பெரும்பான்மையான பெண்களுக்கு 
இருப்பதில்லை,அப்படி இருந்தாலும், ஆண்கள் அதனை ஆபத்தான குணம்
என்று எண்ண வைத்துவிடுவர்.
ரம்ப நாட்களில் மனம் விட்டு பேச மாட்டாள் இவள். 
இவனது பாசமும், பேச்சும் வீழ்த்தியது, அவளின் வைராக்கியங்களை... 
கொஞ்சம் கொஞ்சமாய், ஆண்களிடம் 
சரியாக பேசாத இவள், இவனை கொஞ்சுகிற அளவுக்கு கவரபட்டாள்.
நட்பு காதலானது...
கவிதைகளே படித்திறாத பிருந்தாவை, 
இவன் கவிதைகளின் ரசிகையாக்கிவிட்டான்.
"குட்டிபாப்பா, செல்லம், புஜ்ஜிகுட்டி, மை பஸ்ட் பேபி,குட்டிம்மா"
இவைகள் இவர்களின் உரையாடலில் அதிகம் இடம்பெறும் வார்த்தைகள். 
தினமும் அவளை இவனோ, இவனை அவளோ நிறைகளை சொல்லி பாராட்டி, 
தான் எவ்வளவு நேசிக்கிறேன் என சொல்லி, 
கொஞ்சி கொஞ்சி தூங்கவைப்பர்.
ஒருநாள் இந்த சம்ரதாயங்கள் அரங்கேறாவிடினும் 
உறக்கமில்லா இரவுகளில் ஒன்று கூடும்.
ன் எழுத்துக்களுக்கான அங்கீகாரம் கிடைக்காத 
ஏக்கத்தோடு இருந்த இவனுக்கு, ஆனந்த விகடன் மூலம் 
அறிமுகப்பட்டது ட்விட்டர்
ட்விட்டரில் இவன் எழுத ஆரம்பித்து 15 நாட்களிலேயே 
அவன் எதிர்பார்த்ததற்கும் மேலாக அங்கீகாரம் கிடைக்கபெற்றது. 
தூக்கிவிடும் நற்குணமுடையோர் நிறைந்த தளம் என்பதால் பயணம் வெற்றிபயணமானது.தொடர்பவர்கள் தரும் ஊக்கம் எந்நேரமும் 
ட்விட்டர் விட்டு வெளிவரா அடிமை ஆக்கியது. 
கனவு  மெய்ப்ப்படும்விதமாய் வலையும் பாய்ந்துவிட்டான்
(ஆனந்த விகடனில் வலைபாயுதே பகுதியில் இடம்பெற்றான்). 
விடுதலை விரும்பா அடிமை ஆகி போனான் த்விட்டருக்கு...
அலைபேசியில் அழைப்புகள் வந்தாலும் 
துண்டித்துவிட்டு த்விட்டரிலேயே ஊறி கிடப்பான்.
படித்துக்கொண்டிருக்கும் போதும் அரைமணி நேரத்திற்கு ஒருமுறை 
உள்ளே எட்டிபார்த்துகொண்டே இருப்பான் ட்விட்டரை.
இதை அவளுக்கு சொல்லி புரிய வைக்க முற்பட்டான்... 
அவள் உதிர்த்த கடைசி வார்த்தைகள் 
"சமூகவலைத்தளம், நம்மை சேர்த்து வைத்து, 
இன்று பிரித்தும் வைத்துவிட்டது...."