Wednesday 23 November 2011

மன்னிப்பாயா???

கடிதம்,நினைவுகளை சுமந்துவருவது,
நிகழ்காலத்தில் ஆனந்தத்தையும்
பின்னாளில் சோகத்தையும் தரவல்லது.


எப்போதும் போல் இப்போதும் கண்ணீர்
இடர்பாடுகளுக்கிடைய படித்து முடித்தாள், 
கவிதை நிரம்பிய கடிதத்தை.
பிருந்தா...

இலக்கை சரியாக அடைந்த அம்பு போல மற்றொன்று எய்ய தெரியா வேடன்
போல்
பிரம்மனை ஆக்கியவள்.
இவள்போல இன்னொருத்தியை படைக்க தெரியவில்லை அவனுக்கு.
"பேரழகி"என்பதற்கு விரிவுரை தரும் அவள் உருவம். இவள் ஆசிரியர்பயிற்சி
முடித்து வீட்டில், தேர்வுமுடிவுக்காக காத்திருக்கிறாள்
முகநூலை திறந்தாள். அவளின் காதலனின் இருப்பை காட்டியது, அவனின் பெயர் அருகே இருந்த பச்சைப்பொட்டு 
பாலு...
காஞ்சிபுரத்தில் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து கொண்டிருக்கிறான். கவிதை எழுதுவது அவனுக்கு மிகபிடித்தமான ஒன்று. நல்லா பேசுவான் செண்டிமெண்டல் இடியட். 
"Hai..."இவள்,
தாமதத்தோடு "Hi..."அவன்
பிஸியா?
"இல்ல இல்ல! கிளம்பலாம்ன்னு நினைச்சேன். சொல்லு!"என்றான். 
"கெளம்ப
வேண்டியது தான,அப்புறம் என்ன சொல்லு? எதோ தியாகம் பண்ற மாதிரி" 
எப்போதும் இவர்களின் உரையாடல் இப்படி தானிருக்கும். 
சிறது நேர பேச்சுக்கு பின்,வழக்கம்போல தூக்கம்வருவதாக
சொல்லி புறப்பட்டான் காதலன். 
அவன் விடைபெற்றதும்,அவனது நினைவுகள் புழங்கதொடங்கிற்று.
நினைவுகளின் கேள்விகளுக்கு நிஜத்திடம் விளக்கமில்லை.
காதலை ஏற்றுக்கொள்ளும் வரை, அவனிடமிருந்து கிடைத்த பாசம்,
எங்கே போனது இப்போது? 
விரட்டியது
விடைதெரியா கேள்விகள்.



ற்றுமோரு  கடிதம் படிக்க தொடங்கினாள்.
மூக்கு புடைக்க புடைக்க
விம்மி விம்மி அழவைத்தது அக்கடிதம்.
இந்த கடிதம் எழுதிய காதலன் இப்போது
எங்கே தொலைந்து போனான்? 
இந்த கடிதம் எழுதிய நாட்களை அவனுக்கு நினைவுபடுத்த விரும்பி முகநூலில்
அந்த கவிதையை பகிர்ந்தாள்.
காலை எழுந்ததும் இந்த பகிர்தலை பார்த்த
பாலு,கடுங்கோபமுற்றான்.
அலைபேசியை எடுத்து அவளை அழைத்தான்.
கிட்டத்தட்ட
2மாதங்களுக்கு பின் அழைக்கிறான்,
அவளின் குரல் கேட்டதும் கோபம் கொஞ்சம்
குறைந்தது உண்மையெனினும் கோபத்தை விட்டுக்கொடுக்காமல் 
"ஏன் அந்த
கவிதையை FBல போட்டே?
"ச்சும்மா..."
"என்ன சும்மா?
அது நா உனக்காக எழுதினது
அத்தோட அந்த போஸ்ட்ல என் பேர கூட போடல நீ.. 
அது என்ன ஒன்னோடதா? 
இடைவிடாது பேசினான்.
எப்படி சொல்வாள், அந்நாட்களாய் நினைபடுத்தவே பகிர்ந்தேன் என. 
மௌனம் மட்டுமே பதிலாய் நின்றது. 
"ஒங்கிட்ட தான் பேசிகிட்டு
இருக்கேன்" 
"ஸ்ஸ்ஸாரி"
"இப்போ ஏன் அழுற?" 
மௌனம்ம்ம்ம்ம்... கோபம் வெகுவாக குறைந்தது.
அழைப்பு துண்டிக்கபட்டது... 
வனுக்கொன்றும் பாசம் இல்லாமல் போய்விடவில்லை. 
முன்பு போல் இப்போது பேசமுடிவதில்லை, இவன் மனதில் 
தனது நடத்தையில் எந்த தவறும் இல்லை என்பதை அழுத்தமாக நம்பினான். 
எல்லா உறவுகளிலும் ஆரம்ப நாட்களில் அதிகம் பேச வேண்டியிருக்கும், 
புரிதலை மேம்படுத்தி கொள்ள.. அதுவும் ஆண் பெண் உறவில் சொல்லவே தேவையில்லை.அவ்வுறவு முதிர்வு பெற்று பக்குவபட்டபின் 
அவ்வளவாக பேச வேண்டி இருப்பதில்லை. இதுவே அவள் கேள்விகளுக்கு 
இவன் எப்போதும் வைத்திருக்கும் விளக்கம்.   
வளுக்கோ,அவளது நாட்களில் நடப்பதை யாரிடம் 
பகிர்ந்துகொள்கிறாளோ அவர்களை நெருக்கமானவர்கள் என்று நினைப்பாள்.
ஆரம்பநாட்களில் பேசியது போலவே அவன் பேசிக்கொண்டிருக்க
வேண்டும் என்று.. 
வளை இவனுக்கு அறிமுகப்படுத்தியது சமூக இணையதளம் தான், 
முகநூல்... இவனது நட்பு அழைப்பை ஏற்றுக்கொண்டது கூட அவளில்லை,
அவளது தோழி ஜெனிதா மேரி, அதுவும் இவனது எழுத்துக்கள் பிடித்துப்போய் ஏற்றுக்கொண்டாள்.
எழுத்துக்களில் பெரிதாக ஈடுபாடில்லை பிருந்தாவிற்கு..
எப்போது ஆன்லைனுக்கு வந்தாலும் இவளுக்கு Message செய்யாமல் இருக்கமாட்டான்.எல்லோருக்கும் பதில் அளிப்பது இவளது தனித்துவம்.
நம்மை மதிப்போரை நாமும் மதிக்க வேண்டும் என்பது இவள் எண்ணம்.
தனித்துவம் தானே? இந்த குணம் பெரும்பான்மையான பெண்களுக்கு 
இருப்பதில்லை,அப்படி இருந்தாலும், ஆண்கள் அதனை ஆபத்தான குணம்
என்று எண்ண வைத்துவிடுவர்.
ரம்ப நாட்களில் மனம் விட்டு பேச மாட்டாள் இவள். 
இவனது பாசமும், பேச்சும் வீழ்த்தியது, அவளின் வைராக்கியங்களை... 
கொஞ்சம் கொஞ்சமாய், ஆண்களிடம் 
சரியாக பேசாத இவள், இவனை கொஞ்சுகிற அளவுக்கு கவரபட்டாள்.
நட்பு காதலானது...
கவிதைகளே படித்திறாத பிருந்தாவை, 
இவன் கவிதைகளின் ரசிகையாக்கிவிட்டான்.
"குட்டிபாப்பா, செல்லம், புஜ்ஜிகுட்டி, மை பஸ்ட் பேபி,குட்டிம்மா"
இவைகள் இவர்களின் உரையாடலில் அதிகம் இடம்பெறும் வார்த்தைகள். 
தினமும் அவளை இவனோ, இவனை அவளோ நிறைகளை சொல்லி பாராட்டி, 
தான் எவ்வளவு நேசிக்கிறேன் என சொல்லி, 
கொஞ்சி கொஞ்சி தூங்கவைப்பர்.
ஒருநாள் இந்த சம்ரதாயங்கள் அரங்கேறாவிடினும் 
உறக்கமில்லா இரவுகளில் ஒன்று கூடும்.
ன் எழுத்துக்களுக்கான அங்கீகாரம் கிடைக்காத 
ஏக்கத்தோடு இருந்த இவனுக்கு, ஆனந்த விகடன் மூலம் 
அறிமுகப்பட்டது ட்விட்டர்
ட்விட்டரில் இவன் எழுத ஆரம்பித்து 15 நாட்களிலேயே 
அவன் எதிர்பார்த்ததற்கும் மேலாக அங்கீகாரம் கிடைக்கபெற்றது. 
தூக்கிவிடும் நற்குணமுடையோர் நிறைந்த தளம் என்பதால் பயணம் வெற்றிபயணமானது.தொடர்பவர்கள் தரும் ஊக்கம் எந்நேரமும் 
ட்விட்டர் விட்டு வெளிவரா அடிமை ஆக்கியது. 
கனவு  மெய்ப்ப்படும்விதமாய் வலையும் பாய்ந்துவிட்டான்
(ஆனந்த விகடனில் வலைபாயுதே பகுதியில் இடம்பெற்றான்). 
விடுதலை விரும்பா அடிமை ஆகி போனான் த்விட்டருக்கு...
அலைபேசியில் அழைப்புகள் வந்தாலும் 
துண்டித்துவிட்டு த்விட்டரிலேயே ஊறி கிடப்பான்.
படித்துக்கொண்டிருக்கும் போதும் அரைமணி நேரத்திற்கு ஒருமுறை 
உள்ளே எட்டிபார்த்துகொண்டே இருப்பான் ட்விட்டரை.
இதை அவளுக்கு சொல்லி புரிய வைக்க முற்பட்டான்... 
அவள் உதிர்த்த கடைசி வார்த்தைகள் 
"சமூகவலைத்தளம், நம்மை சேர்த்து வைத்து, 
இன்று பிரித்தும் வைத்துவிட்டது...." 


Thursday 22 September 2011

நடைபாதைவாசிகள்

இந்த பதிவு சென்னையில் நடைபாதையில் வசிக்கும் 
மக்களின் வாழ்க்கை பற்றியது....
என் மனதை வெகுவாக பாதித்த 
அவர்களின் வாழ்க்கை முறையை 
என்னால் முடிந்தவரை பதிவு செய்திருக்கிறேன்.


வாகனபுகையும், தூசியும்,
அட்சதை தூவ அரங்கேறும் சமையல்
எங்கள் உணவு
எப்போதும் சோறு
கட்சிகூட்டம் என்றால் கிட்டும் பிரியானி;

தேர்தல்பிரச்சார நாட்களில்
வேட்பாளர்களை விட நாங்கள் பரபரப்பாய்
இருப்போம்-தினம் ஒரு பொதுக்கூட்டம்

கடல்போல் தான் நாங்களும்
கழிவை வெளியேற்ற கடற்கரையை நாடுவோம்...

மழை பெய்தால் மற்றவர்கள் துக்கம் துடைக்கப்படும் 
எங்கள் தூக்கம் துறக்கப்படும்

போர்வைஇன்றி படுத்தால்
இரத்ததானம் செய்யவேண்டியிருக்கும் கொசுக்களுக்கு... 
போர்வைக்குள் புதைந்தவுடன் 
வியர்வை அபிஷேகத்திலும்
விரைவாய் விழிவந்தடையும் உறக்கம்

போர்வை மூடியபடி,
திறந்து, தீர்க்கப்படும் 'காமப்பசி'...

உடல் ஒவ்வாமையிலும் 
படுக்கை காணாது எங்கள் பகல்...

இருளை பாதுகாவலன் ஆக்கி
பார்வையாளர்கள் உறங்கிய பின்
நடுநிசியில் உடல் நனைப்பது தான்
'எங்கள் குளியல்'  

எங்கள் குடும்பமும் பல்கலைகழகம் தான்
திறந்தவெளி பல்கலைகழகம்...

அனைவரும் நோக்கும்படி தான் 
எங்கள் வாழ்வே, 
எவரும் உற்று நோக்குவதுதில்லை
எங்கள் வாழ்வை...    

Saturday 3 September 2011

தங்கையின் கடிதம்

அக்கறை காட்டுவதால்,
அறிவுரை நீட்டுவதால்,
நலம் நாடுவதால்,
நல்வழி நடத்துவதால்,
நீ இன்னொரு தந்தை...

"புரிதலில் புலமை,
ஆளுமை திறனுள்ள ஆறுதல்,
அனைத்தையும்
நேர்த்தியாக பகிர்ந்து கொள்ளும் நேர்மை",
இவைகளால்
நீ என் 'நண்பன்'...

'வார்த்தைகளில் வழியும் வாஞ்சை,
திட்டும் போதும் சொட்டும் நேசம்,
கோபத்திலும் கொடுஞ்சொற்கள் வாரா நிதானம்',
இவற்றையெல்லாம் நான் கண்டது
உன்னில் மட்டும் தான்...

'உன் அனுபவம்'
எனக்கு பக்குவம் பயிற்றுவிக்கும் 'பாடம்',
'என் ஆசைகள்'
நீ நிறைவேற்ற துடிக்கும் 'நேர்த்திக்கடன்'...

அண்ணா!
நீ எந்தன்
இரண்டாம் தந்தை,
முதல் நண்பன்...

Tuesday 23 August 2011

கிறுக்கல்களின் தொகுப்பு

இதெல்லாம் நான் பள்ளிப்பருவத்தில் எழுதியவை... சில சின்னப்புள்ளத்தனமா இருக்கும். எழுதினப்போ, நான் சின்னப்பையன் தாங்க...

காதல் வெந்நீர்

காதலெனும் வெந்நீரில் குளிக்க
கதகதப்பாக தானிருக்கும்!!!
அந்த வெந்நீருக்கு விறகாக்கப்படுவது,
இளைஞனின் இலட்சியமும்,
பெற்றோரின் கனவுகளும் தான்...

உப்பிட்டவள் 

நம் உறவெனும் உணவிற்கு
உன் கண்ணீரால் உப்பிட்டவள் நீ!!!
அதனால் தான்,
மற்ற உறவுகளை விட,
உன் உறவு மட்டும் சுவைமிக்கதாய் ஜொலிக்கிறது...

பிருந்தாவனம்

ஆசையென்பது பூச்செடியானால்...
நேற்று வரை,
என் மனம் களர்நிலம்...
அதில் வீழ்ந்த உன் பார்வை துளிகளால்,
இன்றோ,
என் மனம் பிருந்தாவனம்...

கவிஞனாக்கிய நீ

காற்றை இசையாய் மாற்றும்
புல்லாங்குழல் போல..
கடப்பவனை கவிஞனாய் மாற்றும்
மந்திரமங்கை நீ...

பாஸ்கல்விதி 

'பாஸ்கல்விதி' பொய்த்துபோகிறது
அன்பில் மட்டும்...
அன்பின் 'ஆழம்' அதிகரிக்க அதிகரிக்க,
மனங்களின் 'அழுத்தம்' குறைகிறது...

விழிசேர்க்கை

 தாவரங்கள் 'சூரியனிடமிருந்து' சக்தி பெறுகிறது
'ஒளிசேர்க்கை' மூலம்...
நான் உன் 'பார்வையிலிருந்து' சக்தி பெறுகிறேன்
'விழிசேர்க்கை' மூலம்...

தங்கை

குழந்தைத்தனமும்,
குறும்புத்தனமும்,
குழைத்து தந்தெனை
குளிர்வித்தவள் நீ!
 பாசம் காட்டி, 
பந்தம் நீட்டி,
வாழ்வில் வர்ணம் தீட்டிய
வானவில் நீ!!

மனைவி

நாதங்களில் ஸ்வரம் மீட்ட,
நாணத்தோடு வருபவளை,
நாதஸ்வரங்களோடு
வரவேற்று விவாகமிக்கிறோம்...

Vibration mode

மற்ற அழைப்புகளுக்கெல்லாம்
என் அலைபேசி மட்டுமே துடிக்கும்...
உன் அழைப்பிற்கு மட்டும்,
அலைபேசியுடன்
என் ஆன்மாவும் துடிக்கும்...

ஒத்துழையாமை


நீ எதிர்படும் வேளையில் கண்களும்,
உன்னுடன் உரையாடும் வேளையில் நாக்கும்,
'ஒத்துழையாமை'யில் இறங்கிவிடுகின்றன...

நிலா

என் உலகம் அமாவாசையில் ஆழ்ந்தது,
'பகலில் உலா வரும் நிலா'
நின்னை காணாமல்...

ஒருதலைக்காதல்

வெளிப்படுத்தப்பட்ட காதல்கள்
பின்னாளில் கொச்சைபடுத்தபடலாம்.
உள்ளத்தில் உறைந்திருப்பவை என்றும்
புனிதம் இழப்பதில்லை...

மந்திரமங்கை

காற்றை இசையாய் மாற்றும்
புல்லாங்குழல் போல..
கடப்பவனை கவிஞனாய் மாற்றும்
மந்திரமங்கை நீ...


Friday 29 July 2011

நெல்லிகன்னி

கவிதைகளுக்காக என் கற்பனைகள் அர்ப்பணம்
கவிதைகள் அனைத்தும் உன் காலடியில் சமர்ப்பணம்...  

தேர்வில் 'முதல் மதிப்பெண்' பெற்று இனிப்பு வழங்கினாய்...
அன்று சுவைத்த இனிப்பு மட்டும்,
"நா" மட்டுமன்றி "நாளமெல்லாம்" இனித்தது...

கண்கள் கலந்த போது
"கற்கண்டாய்" இனித்தாய்...

தேடி தேடி பார்த்த போது
"தேன்பாகாய்" இனித்தாய்...

நீயும் என்னை பார்த்த போது
"நித்திரையிலும்" இனித்தாய்...

சிணுங்கி கொண்டே சிரித்த போது 
"செவ்வாழையாய்" இனித்தாய்...

அர்த்தமில்லாமல் ஆயிரம் வார்த்தைகள் பேசினாய்
அதன் அர்த்தங்களை சரியாக தன் புரிந்து கொண்டேன் நான்...
"தவறாக புரிந்து கொண்டீர்கள்" இது நீ...
முதல் முறை கசந்தாய்...

"பெற்றோர்கள் முக்கியம் தான்; நீயும் முக்கியம்" இது நான்...
"நீ முக்கியம் தான்; பெற்றோர்கள் ரொம்ப முக்கியம்" இது நீ...
நீ கூறியதில் பிழை ஒன்றும் இல்லை என்று இப்போது புரிகிறது எனக்கு..
ஆனால் அப்போது கசந்தாய்...

நெல்லிக்கனி முதலில் கசந்து "தண்ணீர்" குடித்த பின் இனிக்கும்.
நீ "பார்வை படலத்தில்" பயங்கரமாய் இனித்தாய்...
உன்னுடன் பேச ஆரம்பித்து,
"காதல்" என்னும் "பானம்" அருந்திய போது,
"எதிர்பார்ப்பு" என்னும் "எச்சிலோடு" சேர்ந்து சென்றது என்னுள்ளே...
அதன் பின் தான், கசந்தாய்..

முதலில் இனித்து பின்னர் கசந்த பெண்ணே நீ 
"வித்தியாசமான நெல்லிக்கனி"...